கோவையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றால் இன்று முதல் 7 நாட்களுக்கு (7-ம் தேதி வரை) நகைக்கடைகள் மற்றும் நகைப்பட்டறைகள் மூடப்படுகின்றன.
கோவையில் கிராஸ்கட் சாலை, நூறடி சாலை, பெரியகடைவீதி ,ஒப்பணக்கார வீதி, ராஜவீதி, உள்ளிட்ட இடங்களில் பெரியதும், சிறியதுமாக ஏறத்தாழ 350 நகை விற்பனைக் கடைகள் உள்ளன. இங்குசுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்கள் வேலை செய்கின்றனர்.இதேபோல், கெம்பட்டி காலனி, பெரியகடைவீதி, ராஜவீதி, மில் ரோடு, கடைவீதி, வைசியாள் வீதி, செல்வபுரம், தெலுங்கு வீதி, சலீவன் வீதி, காந்திபுரம் போன்ற இடங்களில் மொத்தம் 25 ஆயிரம் நகை தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் நகை பட்டறைகள் இருக்கின்றன. இந்த இடங்களிலெல்லாம் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
நகைக் கடை உரிமையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தரும் தங்க கட்டிகளை பெற்றுக்கொண்டு அவர்கள் எப்படி கேட்கிறார்களோ அது போல பல வடிவங்களில் அதை ஆபரணமாக மாற்றித் தருவது இவர்களின் பணியாக இருந்து வருகிறது.தற்போது கோவை மாவட்டத்தில் உள்ள நகைக்கடை உரிமையாளர்கள் சங்கத்தின் கீழ் மட்டுமே 350 நகைக்கடைகள் உள்ளது இதில் தினசரி சராசரி வருமானம் மட்டும் ரூபாய் 50 கோடிக்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் முகூர்த்த நாட்களில் இந்த வியாபாரத்தை மென்மேலும் அதிகரிக்கும்.
மாவட்டமெங்கும் நகைக் கடைகள் இருந்தாலும், சில மாநகரங்களில் உள்ள பகுதிகளில் தான் நகை கடைகள் அதிகம் தென்படும். இதேபோல் கோவை மாவட்டத்தில் சேர்ந்த நகை உற்பத்தி கால் சங்கத்தின் கீழ் வரும் நகை தயாரிப்பு நிறுவனங்கள்மற்றும் நகை பட்டறைகள் சென்ற மார்ச் மாதம் இறுதியில் பொது முடக்கம் சிறப்பிக்கப்படும் முன்னர் வரை சராசரியாக சுமார் 200 கிலோ அளவுக்கு தங்க நகைகள்தயாரிக்கப்பட்டு வந்துள்ளது.ஆனால், பொது முடக்க உத்தரவுக்கு பின், அதில் சில ஊரடங்கு தளர்வுகள் அறிவித்தபின் பட்டறைகள் திறக்கப்பட்ட பின்னர், இதன் உற்பத்தி அளவு கணிசமாக குறைந்தது.
இதில், சென்ற வாரங்களில் சில நகை பட்டறைகளில் முன்பு இருந்ததை ஒப்பிட்டு பார்க்கும்போது, தினமும் 35 சதவீதம் அளவுக்கு மட்டுமே நகைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்கள்.
இந்த பணிகள் மேற்கொள்ளும் நகைக்கடைகளுக்கு மக்கள் கூட்டம் படையெடுக்க ஆரம்பித்தனர், இதில் நகை வியாபாரிகளும் வந்து செல்லும் சூழல் நிலவியது.. இருந்தாலும், குரானா தொற்று நோய்பரவலைத் தடுக்கும் நோக்கத்தில், தமிழகஅரசு அறிவித்திருந்த,, தனிநபர் இடைவெளி கடைபிடித்தல்,முக்கவசம் கட்டாயம்கிருமிநாசினி தெளித்தல் , கிருமி நாசினி மூலம் கைகளை கழுவுதல், குளிர்சாதன வசதியை பயன்படுத்தாமல் இருப்பது, போன்ற அனைத்து நடவடிக்கையும் பின்பற்றப்பட்ட இருந்தன.. இதனை மாநகராட்சி பறக்கும் படையினர் அடிக்கடி சோதனை செய்து உறுதி செய்தனர்.இந்த நிலையில்தான், சென்ற சில நாட்களாக கோயம்புத்தூரில்கொரோனா தொற்றுநோய் வாசிப்பவர்களின் எண்ணிக்கை 450 தாண்டியது இதற்கெல்லாம் உச்சமாக இரு தினங்களுக்கு முன் 589 பெயர் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர்
இதில்மாவட்டத்தில் தினமும் பதிவாகும் தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கையில் 75 சதவீதம் பேர் மாநகராட்சி பணிகளை மேற்கொள்பவர்கள் ஆவார்கள்இதனைத் தொடர்ந்து கோவை அரசு 7 நாட்கள் கடைகளை மூட உத்தரவிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது.
இன்று முதல் 7-ம் தேதி வரை கடைகளை அடைக்க சங்கத்தினர் உறுதி கொடுத்து அதை செயல்படுத்தியும் வருகின்றனர்.
இதுகுறித்து கோவை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சபரிநாத் தெரிவித்தபோது, “அரசு அறிவித்த கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் நகைக்கடைகளில் முழுவதுமாக பின்பற்றித்தான் வருகின்றோம். ஆனால் வாடிக்கையாளர்கள் சிலர் குடும்பத்துடன் நகைக்கடைக்கு வருகின்றார்கள். அவரிடம் தனிநபர் இடைவெளி பற்றி பேசினாலே கோபம் கொள்கிறார்கள். எனவே இது போன்ற விஷயங்களை தற்போது தவிர்க்க முடியாமல் இருக்கின்றது
அதனாலேயே, இந்த தொற்று பரவலைத் தடுக்க மாநகராட்சி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கட்டுப்படும்வகையில், மக்கள் கூட்டத்தை முழுவதுமாக தவிர்க்கும் வகையில், நகைக்கடைகளை இன்று முதல் 7-ம் தேதி வரை மூட முடிவு செய்துள்ளோம், அதனை தற்போதுபின்பற்றி வருகிறோம். மேலும், 7 நாட்களுக்கு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடியவிடுமுறை தான் அளித்துள்ளோம். 7 நாட்கள் கடைகள் மூடுவதன் எங்கள் அனைவருக்கும் சுமார் ரூ.350 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்படும்” என்றார்.