அமெரிக்காவில் டிக் டாக் செயல்பாட்டை கையகப்படுத்துவது தொடர்பாக செப்டம்பர் 15ம் தேதிக்குள் ஒப்பந்தம் செய்யப்படும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைராசால் அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடு. இதன் தாக்கத்தால் வர இருக்கும் தேர்தலில் டிரம்ப்பின் வெற்றி என்பதே கேள்விக்குறி ஆகி உள்ளது. இதனால் சீனாவின் மீது கடும் கோபத்தில் உள்ள டிரம்ப், அந்நாட்டிற்கு எதிராக கடும் கண்டனங்களையும் பொருளாதார தடைகளை விதிக்கும் செயல்களையும் தொடர்ந்து செய்து வருகிறார்.
அதை ஒரு பகுதியாக சீனாவுக்குச் சொந்தமான பிரபல டிக் டாக் செயலியை அமெரிக்காவில் தடை செய்ய இருப்பதாக அதிபர் டிரம்ப் அண்மையில் தெரிவித்தார். உலக அளவில் மிகவும் பிரபலமான க டிக் டாக் செயலிக்கு, இந்தியாவில் அதிக பயனாளர்கள் இருந்த நிலையில் சீனா உடன் ஏற்பட்ட எல்லைப் பிரச்சனை காரணமாக ஏற்கனவே இந்தியாவில் டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவும் தடை விதிக்கும் அபாயம் ஏற்பட்டதையடுத்து, டிக் டாக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனம் மாற்று வழிகளை யோசிக்கத் தொடங்கியது.
அதன்படி, இருப்பதை கொண்டு முடிந்த அளவிற்கு லாபம் பார்க்கும் நோக்கில் டிக் டாக் நிறுவனத்தின் அமெரிக்க செயல்பாடுகளை மட்டும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடப்பதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகி வந்தன.
இதனிடையே, டிக் டாக் செயலிக்கு தடை விதிப்பதில் டிரம்ப் உறுதியாக இருந்ததால், பைட் டான்ஸ் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தையை மைக்ரோசாப்ட் நிறுவனம் நிறுத்தி வைத்ததாக கூறப்பட்டது. இந்த சூழலில், டிரம்ப்பை சந்தித்த மைக்ரோசாப்ட் சி இ ஓ சத்ய நாதெல்லா டிக் டாக் செயலியில் அமெரிக்க செயல்பாட்டை கைப்பற்றுவது தொடர்பாக பேசியுள்ளார்.
இந்த சம்பவம் மைக்ரோசாப்ட் நிறுவனம், டிக்டாக் செயல்பாட்டை அமெரிக்காவில் வாங்குவதற்காக சீன தொழில்நுட்ப நிறுவனமான பைட் டான்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை உறுதிப்படுத்தியது.
இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு மைக்ரோசாப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “டிக் டாக் நிறுவனத்தை வாங்குவது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் இது தொடர்பாக மைக்ரோசாப்ட் பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருகிறது. அமெரிக்க அரசுடன் ஒரு ஒப்பந்தபோடப்பட்டு உள்ளதாகவும் செப்டம்பர் மாதம் 15ந்தேதிற்குள் பேச்சுவார்த்தைகளை முடிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.